நடிகை ப்ரீத்தி முகுந்தன் அறிமுகப்படுத்திய “குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0”

மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தென்னிந்தியாவின் முன்னணி ஜூவல்லரி நிறுவனங்களில் ஒன்றாக ஏ.வி.ஆர். ஸ்வர்ணமஹால் ஜூவல்லரி “குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0” நகை டிசைன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிகழிச்சியில் கலந்து கொண்ட நடிகை ப்ரீத்தி முகுந்தன் “குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0” நகைகள் அறிமுகம் செய்தார். இவ்விழா சென்னை அண்ணா நகரில் உள்ள ஏ.வி.ஆர். ஸ்வர்ண மஹால் ஜூவல்லரியில் கோலாகலமாக நடைபெற்றது.

நகை அறிமுகம்குறித்து இயக்குனர் திரு AVR சித்தாந்த் கூறியதாவது:-

எங்களின் முந்தய குமரி கண்டம் கலெக்ஷனை பெரும் வெற்றியாக்கிய வாடிக்கையாளர்களுக்கு நன்றி. அதன் தொடர்ச்சியாகப் புதியதோர் உலகிற்கு நாங்கள் உங்களை அழைத்துச்செல்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம். குமரிக்கண்டம் என்றாலே, தொன்மையான, அழியாத ஒரு பாரம்பரியத்தைக் குறிக்கும். அதனை மையமாகக் கொண்டு, “குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0” நகைகள், நம் முன்னோர்களின் கலைநுணுக்கத்தை, நவீன சாயலில் வழங்கும் ஒரு முயற்சியாகும். ஒவ்வொரு நகையும், அந்தத் தொன்மையான பரம்பரை மாறாமல், புதியதோர் அழகில் உருவாக்கப்பட்டுள்ளது.

நம் பாரம்பரியம் போற்றும் வகையில் அற்புத கலைநுணுக்கங்களோடு, உங்கள் வீட்டு இளவரசிக்கான, திருமண வைபவத்திற்கு ஏற்ற ஆயிரக்கணக்கான நகைகள் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது! கற்பனையை மிஞ்சிய குமரிக்கண்டத்து பொற் சிற்பி நெய்த திருவாபரணங்கள் இங்குக் கிடைக்கும்.

இந்தக் குமரிக்கண்டம் கலெக்ஷனின் சிறப்பு என்னவெனில், இது முந்தைய கலெக்ஷனைவிட அதிக பரிசோதனைகளை எதிர்கொண்டு, அவற்றில் தோன்றிய பல புதுமைகளைச் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது. இவை, உங்கள் பார்வைக்கு மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கை முறைமைகளில் ஒரு முக்கியமான பங்காக விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.மேலும் சிறப்பம்சமாக எங்களது அனைத்து ஷோரூம்களிலும் குமரிக்கண்டத்து உலகின் வழி எம்பெருமானின் வைபவத்துடன் கூடிய உற்சவ தரிசனம் நடைபெறுகிறது. அதனையும் வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம் என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய நடிகை ப்ரீத்தி முகுந்தன்:-

ஏ.வி.ஆர்.ஸ்வர்ண மஹாலுடன் இரண்டாண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளேன் “குமரிக்கண்டம் கலெக்ஷன் 1.0” நகைகளை நான் தான் அறிமுகம் செய்தேன், நமது வரலாற்றையும் பாரம்பரியத்தையும் நகைகள் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் அருமையான விஷயம் “குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0” அறிமுகப்படுத்துவதில் மிகவும் பெருமை கொள்கிறேன்.இந்த அழகிய கலெக்ஷனை உங்கள் கண்களால் பார்க்க, உங்கள் இதயத்தில் உணர, ஏ.வி.ஆர். ஸ்வர்ண மஹால் ஜூவெல்லருக்கு வருகை தாருங்கள்.x

ஏ.வி.ஆர். ஸ்வர்ணமஹால் குறித்து

ஏ.வி.ஆர். ஸ்வர்ணமஹால் ஜூவல்லரி சேலத்தில் ஸ்வர்ணபுரி, கடைவீதி – 2 கிளைகள், சென்னை, புதுச்சேரி, தாரமங்கலம், மேட்டூர், ஈரோடு, ராசிபுரம், ஆத்தூர், கள்ளக்குறிச்சி, அரூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர்-ஜெயநகர், டிக்கென்சன் ரோடு மற்றும் மல்லேஸ்வரம் ஆகிய இடங்களில் பரிசுத்தமே எங்கள் பாரம்பரியம் என்ற கொள்கையோடு செயல்பட்டு வருகின்றன.