

நான் ஒவ்வொரு முறை வட இந்தியாவில் படபிடிப்புக்குச் செல்லும் போதும் அவர்களைப் பார்த்துள்ளேன். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் பிரமிப்பாக இருக்கும். நான் மூன்று நாட்களுக்கு முன்னால் கார்த்தியை சந்தித்த போது “ நான் விமான படை அதிகாரியை இப்போது இருக்கும் படப்பிடிப்புத் தளத்திற்கு அருகே எங்காவது கண்டால் உடனே எழுந்து மரியாதை செலுத்துகிறேன் என்றார் “ . அது தான் அவர்கள் .
அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்தப் படம் இருக்கும். ஒவ்வொரு முறை ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து வேலை செய்வதும் புதிய அனுபவமாகும். நான் அவரிடம் நாளை படப்பிடிப்பு உள்ளது .பாடல் வேண்டும் என்று கேட்டுவிட்டு அவரைப் பாடலுக்காகச் சந்திக்கச் சென்றால் அவர் தீம் மியூசிக் ரெடி செய்து வைத்திருப்பார். ஆனால் அந்த தீம் மியூசிக்கை கேட்டதும் சந்தோஷத்தில் நம் மனம் மாறி தீம் மியூசிக்கை ரசிக்க ஆரம்பித்துவிடும்.
என் ஒவ்வொரு படத்துக்கும் தேவையான இசையைத் தேடிப் பிடித்து கொடுப்பவர் அவர். நான் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கும் , ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன் . அடுத்த படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இணைந்து பணியாற்ற அவரிடம் உங்கள் முன்னால் கேட்டுக்கொள்கிறேன் ”என்றார் இயக்குநர் மணிரத்னம்.
விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான பேசியபோது , ”இயக்குநர் மணிரத்னம் சார் எனக்கு கிடைத்தது ஒரு வரபிரசாதம் எனலாம். நான் மணிரத்னம் சார் அவர்களை பார்க்கவில்லை என்றால் இன்று நான் இருக்கும் இடம் எனக்குக் கிடைத்திருக்காது. அவருடன் வேலை பார்ப்பது ஒரு தெய்வீகமான அனுபவம் எனலாம்” என்றார்.

விழாவில் அதீதி ராவ் ஹைதாரி பேசியது , ”நான் சோசியல் மீடியாவில் தமிழ் மக்கள் அனுப்பும் மெச்செஜ் அனைத்தும் படித்து வருகிறேன். சின்ன வயதில் எனக்கு ஒரு கனவு , எனக்கு மணி சார் படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் அந்த கனவு. அந்த கனவு நிஜமாகி உள்ளது . நான் இன்னும் நிறைய கனவு காண்பேன். மணி சாரோடு இணைந்து பணியாற்றியது எனக்கு மிகப்பெரிய பலம். கார்த்தி ஒரு ஜென்டில்மேன் ” என்றார்.
விழாவில் நாயகன் கார்த்தி பேசியபோது , ”நான் மணி சாரிடம் ஜூனியர் மோஸ்ட் உதவி இயக்குநராக இருந்து ஹீரோவாகிவிட்டேன். எனக்கு இது ஒரு கனவு படம் என்றால் அது பொய்யாக இருக்கும் , ஏனென்றால் எனக்கு இப்படி ஒரு நல்ல கனவு வந்ததே இல்லை. நான் யூ.எஸ்ஸில் படித்துவிட்டு சினிமாவுக்கு செல்கிறேன் என்றதும் எல்லோரும் சொன்னது உனக்கு ஏன் இந்த வேலை என்று தான். பொறியியல் படித்துவிட்டு ஏன் சினிமாவுக்கு செல்ல வேண்டும் என்று என்னுடைய வெள்ளைகார நண்பர்கள் கூட கேட்டார்கள்.
நான் மணி சாரிடம் சினிமாவை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அங்கே நிறைய கற்றுக்கொண்டேன். நான் வேலையில் சின்சியராக உள்ளதற்குக் காரணம் மணி சாரிடம் வேலை செய்தது தான் காரணம். மணி சார் என்னை நடிக்க சான்ஸ் வந்தால் கண்டிப்பாக நடி என்றார். மணி சார் இந்த படத்தில் நடிக்கச் சொல்லி என்னிடம் ஸ்கிரிப்ட்டை கொடுத்தது எல்லாம் கனவு போல் இருந்தது. இந்த படத்தில் நடிப்பதற்காக நான் மீசையை எடுத்த கதையை ஒரு புக்கே போடலாம்.இந்த படத்தில் நான் பைடர் பைலட்டாக வருகிறேன். நான் பைடர் பைலட்ஸ் உடன் ஒரு நாள் முழுவதும் இருந்தேன். இதெல்லாம் இந்த படத்தில் நடிக்க எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது. இப்போதும் ஆபீசரை நான் பார்க்கும் போது எழுந்து நின்றுவிடுவேன் . இப்போது நான் மணி சார் ஹீரோ என்பது எனக்கு ஆச்சிரியமாக உள்ளது . இது ஒரு ஆழமான எமோஷனல் காதல் கதை ‘என்றார் .