‘தாரை தப்பட்டை’ விமர்சனம்

2-ttதஞ்சைப் பகுதியில் சன்னாசி கரகாட்டக் குழு வைத்து இருக்கிறார் சசிகுமார் அதில் நடனம் ஆடும் ஆட்டக்காரி வரலட்சுமி.

ஆபாச ஆட்டம் இல்லை, அருவருப்பு வசனம் இல்லை என்கிற கொஞ்சூண்டு தொழில் தர்மம்  பார்க்கிற குழு சன்னாசி குழு . காலத்துக்கு ஏற்ப மாறாததால்  தொழில் நலிகிறது. இந்த வாழ்க்கை போதும் என்று வலிய வரும் வாய்ப்பை ஏற்று தன்னை ‘மாமோய்’ என  காதலுடன் சுற்றி வரும் வரலட்சுமியை வேறொருவனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார் சசி. போன இடத்தில்வரலட்சுமியைச் சித்திரவதை செய்து இன்னொருவனுக்கு தாரை வார்த்ததுடன் பிள்ளை பெறும் இயந்திரமாக வாடகைத் தாயாக்குகிறார் வில்லன் சுரேஷ், இதை அறிந்து பதறிய சசி மீட்க என்ன செய்கிறார்  அதன் விளைவு என்ன என்பதே மீதிக் கதை.

சசி நாதஸ்வரக் கலைஞராக பிச்சி உதறுகிறார். வரலட்சுமி ஆட்டக்காரியாக ஆடிவெளுத்து வாங்குகிறார் சசியின் அப்பா. ஜி.எம்.குமார் கலையை வளைக்காத கர்ம வீரர். விரக்தியில் குடித்து குடித்து இறந்து போகிறார்.ஆனால்  ஜி.எம்.குமாரின் பிடிவாதம் வறட்டுத்தனம்தானே தவிர  அதில் பொருள் இல்லையே. மாமோய்  மாமோய் என்றுகூவிக்கொண்டு சசியை வளையவரும் வரலட்சுமி அப்பாவித்தனத்தில் மட்டுமல்ல அந்தமானில் தவறாக நடக்க முயலும் பெரிய மனிதனை அடித்து உதைக்கும் போது வீரத்திலும் வரலட்சுமி வீரலட்சுமியாக மாறி விளாசியுள்ளார். அட அவர்தான்  படத்தில் நடிப்பில் விஸ்வரூபமே எடுத்துள்ளார் எனலாம் .tharaithappattai11
வில்லன் ஆர்.கே. சுரேஷ் ஆரம்பத்தில் அம்மாஞ்சி போல வந்து பிறகு மிரட்டுகிறார்.

காலமாற்றத்தைக்குறிக்க கரகாட்டத்தில் இரட்டை அர்த்த ஆபாச  வசனங்கள் பேசுவதாக வரும் காட்சிகள்  உவ்வே என குமட்ட வைக்கின்றன .  கரகாட்டமே ஆடாத   கரகாட்டக்குழு பாலா படத்தில் வரும் குழுவாகத்தான் இருக்கும். கரகாட்டகாரர்களின் வாழ்க்கையை சொல்ல வேண்டியவர் வரலட்சுமி வாழ்க்கைக்குத் தாவி கொடூரமான பாதையில் போய்  என திசை மாற்றியது ஏன்? சில காட்சிகளில் மட்டும் தன் முத்திரை போட்டுள்ள பாலா,ஒரு கட்டத்தில்  இதன் மூலம் என்ன தான் சொல்ல வருகிறார் எனக் குழப்புகிறார்.

இளையராஜாவின் 1000 வது படம். திருவாசகம் ரகப்பாடல் பாடல்  தவிர மற்றவை சுமார் ரகம்.இன்னும் எதிர்பாத்தோம் . பின்னணி இசையில்  மட்டும் ராஜா ஏமாற்றாமல்  பலம் சேர்த்துள்ளார்.  பாலாவின் படம், இளையராஜாவின் இசையில் ஆயிரமாவது படம் சசிக்குமார், வரலட்சுமி, ஜி. எம். குமார் எனப் பெரிய எதிர்பார்ப்ப்புடன் போய் உட்கார்ந்தால் ஏமாற்றி விட்டார் பாலா. உன்னை யார் எதிர்பார்க்கச் சொன்னது என குனிய வைத்து முதுகில் சூட்டுக் கோலால் சூடு போட்டு அனுப்புகிறார் .