அரசியல்வாதிகள் கையில் சினிமா போய்விட்டது: தயாரிப்பாளர் குமுறல்

kovai4கிருத்திகா பிலிம் கிரியேஷன் சார்பில் ஏ எஸ் முத்தமிழ் என்பவர் கதை எழுதி தயாரிக்கும் படம் ‘அர்த்தநாரி’ .  ராம் குமார் ,அருந்ததி ஜோடியாக நடிக்க, இயக்குநர் பாலாவிடம் பணியாற்றிய  சுந்தர இளங்கோவன் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் .

படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்  பாரி வேந்தர்  பாடல்களை வெளியிட ,   மைக்ரோசாப்ட் நிறுவன முன்னாள் தலைவர் ரங்க பாஷ்யம் மற்றும் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பழம்பெரும் தயாரிப்பாளர் கோவைத்தம்பி ஆகியோர்  பெற்றுக் கொண்டார்கள் . படத்தின் டிரைலர்  ஒரு அண்டர்கவர் பெண் போலீஸ் அதிகாரியின் நடவடிக்கைகளைப் பற்றியதாக இருந்தது .

நாயகன் ராம்குமார் பேசும்போது ” அருந்ததி சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். அடுத்த விஜயசாந்தியாக அவர் வருவார் ” என்றார் .

கோவைத் தம்பி தன் பேச்சில் “ஒரு காலத்தில் சினிமா தயாரிப்பாளர்கள் , அப்புறம் நடிக நடிகையர்கள் , அப்புறம் இயக்குநர்கள் கையில் இருந்தது . இப்போது அது திரையரங்கு உரிமையாளர்கள் கையில் இருக்கிறது . அது கூட தப்பில்லை . ஆனால் அந்தத் திரையாங்கு உரிமையாளர்கள் அரசியல்வாதிகளின் கையில் இருக்கிறார்கள் . இது மாறும்வரை தமிழ் சினிமா நல்ல நிலைக்கு வராது ” என்றார் .

நாசர் பேசும்போது “இங்கே திரையிடப்பட்ட பாடல்களால்  இந்தப் படம் என்னவோ காதல் படம் போல இருந்தாலும்,
இந்தப் படத்துக்குள் குழந்தைத் தொழிலாளர்களின் அவலம் பற்றிய ஒரு பலமான கதை உண்டு .அது இந்தப் படத்துக்கு உதவும் .
இயக்குநர்கள் சங்கத்துக்கு பாரி வேந்தர் தனது குழும மருத்துவமனைகள் மூலம் செய்யும் உதவிகளை நடிகர் சங்கத்துக்கும் செய்ய வேண்டும் ” என்றார்

பாரி வேந்தர் தன் பேச்சில்  ” என்னோடு எப்போதும் உடன் இருக்கும் முத்தமிழ் இந்தப் படத்தை எடுத்து இருக்கிறார். தமிழ் சினிமா தொழில் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவன் நான் .படத்தில் நல்ல கதை இருக்கிறது . அவர் இந்தப் படத்தில் வெற்றி பெற்று நிறைய படங்களை எடுக்க வேண்டும் ” என்றார் .