எழுவர் விடுதலையில் மனதுவைங்கள்.. உடனே விடுதலை தாருங்கள்!-பாரதிராஜா

வணக்கம்
எழுவர் விடுதலையில் உச்ச நீதிமன்றம் தடையாக இருக்க விரும்பவில்லை..
ஆளுனர் முடிவெடுத்து விடுவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தன் கருத்தை அறிவித்தும் , தமிழக அரசு, அனைத்துக்கட்சித் தலைவர்கள், தமிழக மக்கள் கோரிக்கை வைத்தும் விடுவிப்பதில் காலதாமதம் செய்வது வருத்தத்துக்குரியது. தம்பி பேரறிவாளன் விடுதலைக்காக , ஒரு தாய் 30 வருடமாக சட்ட போராட்டங்கள் நடத்தி
ஒரு விடியற்காலை
பொழுதுக்காக
கண்ணீர் மல்க
காத்திருப்பது
வேதனைக்குரியது..
மதிப்புக்குரிய ஆளுனர்
மற்றும் ஆட்சியாளர்களே
மன்றாடிகேட்கிறோம்
மனதுவைங்கள்..
உடனே விடுதலை தாருங்கள்.

அன்புடன்
பாரதிராஜா
20.11.2020