ஏ.ஆர்.ரகுமானுக்கு பார்த்திபன் பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை!

Parthibanr
ஏ.ஆர்.ரகுமானுக்கு பார்த்திபன் எழுதியுள்ள பிறந்தநாள்  வாழ்த்துக் கவிதை!
காத்திருக்கிறோம் -வரட்டும்னு
காத்திருக்கிறோம் ! என்ன தப்பு?
விடியல் வந்ததும்
Good morning சொல்ல…
நான் கொஞ்சம் கூடுதல் .
யாருக்காவது வாழ்த்து சொல்ல -முதல்
ஆளாய் அலைவேன். இன்று
அகப்பட்டவர்
ஆஸ்கார் ரஹ்மான்
பிரபஞ்சமே வியந்து
பூமி பந்தை விரித்து
பூங்கொத்தாய் உன்
புகழ் கையில் வழங்கியும்
தலை -கால்-தலை
இடம் பெயராமல்
காலைச்சூரியன் பட்ட
கனகபுஷ்பராகமாய்-ஒரு
புன்னகையை மட்டும்
பதித்துவிட்டு அடுத்த
பணிக்குள் விழையும்
உன்னை நானிப்படி
புகழ்கையில் அறிவேன்
நீ…
இசையை கடத்தும்
தீவிரவாதி மட்டுமல்ல,
இசையை கடந்தும்
ஞானி….நீ …. என!
என்றும் அன்பின்
நண்பன்
பார்த்திபன்⁠⁠ .