குறும்படத்திலும் நடிக்கலாம்: நாயகன் யஷ்மித்

yashmithயூகன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் யஷ்மித் தொடர்ந்து “எந்த நேரத்திலும்” போன்ற படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

அவர் தற்போது புகைப்பட கேமராவை மையமாக வைத்து உருவாகியுள்ள     “ மாஸ்டர் பீஸ் “ என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் நாயகனாக நடித்துக்கொண்டிருக்கும் அவரிடம் குறும்படத்தில் நடித்து வெற்றிபெற்று வெள்ளி திரைக்கு வருவார்கள். ஆனால் நீங்கள் வெள்ளித்திரையில் நாயகனாக சில படங்களில் நடித்துவிட்டு இப்போது குறும்படத்தில் நடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு.. ”இன்றைய கால கட்டத்தில் குறும்படம் மூலம் சினிமாவிற்கு வந்த இயக்குநர்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர். குறும்படமோ இல்லை படமோ நல்ல கதை இருந்து நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதாப்பாத்திரம் இருந்தால் கண்டிப்பாக நடிக்கலாம். அப்படி இந்த படத்தின் கதையும் மிக சிறப்பாக இருந்தது நடித்தேன். விரைவில் இந்த படத்தை வெள்ளித்திரையில் பார்ப்பீர்கள்” என்றார்.