சாய் பாபா படத்தில் நடிக்க ஆறுமாதம் விரதம் இருந்த நாயகன்!

power-amகே.ஆர்.மணிமுத்து இயக்கத்தில் TNS தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியாக உள்ள “ அபூர்வ மகான் “ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பவர் சாய்முரளி.

ஷீரடி சாய்பாபா மகிமைகளை எடுத்துக் கூறும் இந்த படத்தில் நடிக்க சாய்முரளி ஆறுமாதம் விரதம் இருந்து மிக சிறப்பாக நடித்துள்ளார். முரளிதரன் என்ற தனது பெயரை சாய் முரளி என மாற்றி முழு சாய்பாபா பக்தராகவே மாறிவிட்டார்.

அவர் மலேசியா சென்றும் படம் ரிலீஸ் ஆகும் வரை விரதம் இருந்து வருவதாக இயக்குநர் கே.ஆர்.மணிமுத்து கூறினார்.

சண்டைக் காட்சிகளில் இவர் இவரது ஆக்ஷனை பார்த்து படக்குழுவினரே ஆச்சர்யப் பட்டுள்ளனர். தற்பொழுது இன்னொரு படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

”நான் இந்த படத்தில் நடித்தது அனைத்தும் பாபா மகிமையால் நடந்தது.

படம் சாய்பாபா ஜீவ சமாதி அடைந்த நாளில் ரிலீஸாக இருந்தது ஆனால் திரையரங்குகள் கிடைக்காத  காரணத்தால் வேறு தேதியில் வெளியாகிறது விரைவில் அணைவருக்கும் சாய்பாபாவின் அருள் கிடைக்கும் ”என்றார்.