முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நாயகனாக சந்தானம்!

santanam4வாசன் பிரதர்ஸ்  – சிவஸ்ரீ பிக்சர்ஸ் –  வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனங்களின் மூலம் 60 ஆண்டுகளாக படத் தயாரிப்பில் தங்களது முத்திரையை அழுத்தமாக பதித்துள்ள இந்த தயாரிப்பாளர்கள் 55 சாதனைப் படங்களைத் தயாரித்துள்ளார்கள்.

பாஸ் என்கிற பாஸ்கரன்நான் கடவுள்நிமிர்ந்து நில் போன்ற சமீபத்திய படங்களை தொடந்து தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “ ஒரு பக்க கதை “ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அதைத் தொடர்ந்து  வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ்  பட நிறுவனம் மூலம் சந்தானம் போலீஸ் வேடத்தில் நாயகனாக நடிக்கும் படத்திற்கு  பிரபலமான எம்.ஜி.ஆரின் பாடலான ஓடி ஓடி உழைக்கணும் என்னும் பாடல் வரியை தலைப்பாக வைத்துள்ளனர். தில்லுக்கு துட்டு வெற்றியை  தொடர்ந்து  சந்தானம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக அமோரா லிஸிர் நடிக்கிறார். மற்றும்  ரோபோ சங்கர், நான்கடவுள் ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், எம்.எஸ்.பாஸ்கர், யோகிபாபு, மயில்சாமி, கோவைசரளா இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திர நடிகர்கள்  நடிக்கிறார்கள்.                                                             ஒளிப்பதிவு     –     கோபிநாத், இசை    –    ஜிப்ரான்,     கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கண்ணா லட்டு தின்ன ஆசையா புகழ் கே.எஸ்.மணிகண்டன்.                                                                                                                       படம் பற்றி இயக்குநர் கூறியதாவது…    முழுக்க முழுக்க நகைச்சுவை படம் இது. இதுவரை சில படங்களில் சந்தானம்  சில காட்சிகளில் போலீஸ் வேடத்தில் சந்தானம் நடித்திருப்பார்.  ஆனால் போலீஸ் வேடத்தில் நாயகனாக நடிப்பது இதுவே முதல் முறை. மற்றும் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் நடிக்கிறார்கள். கண்ணா லட்டு தின்ன ஆசையா எப்படி அனைவரும் பார்த்து ரசிக்கும் படமாக இருந்ததோ அதே போல் இந்த படமும் மக்களுக்கு பிடித்த காமெடி கலக்கல், அதிரடி ஆக்ஷன்  படமாகவும் இருக்கும். மக்கள் திலகம் எம்ஜி.ஆர் அவர்களின் ஹிட் பாடலான  ஓடி ஓடி உழைக்கனும் “  என்ற தலைப்பை எங்கள் படத்திற்கு வைப்பது எங்களுக்கு பெருமை. படப்பிடிப்பு நவம்பர் முதல் வாரத்தில் துவங்கி தொடர்ந்து 25 நாட்கள் நடைபெற உள்ளது என்றார் இயக்குநர் கே.எஸ்.மணிகண்டன்.