அஜித் படத்துக்கு‘வேதாளம்’ என்று பெயர் வைத்தது ஏன்?

எப்போதும் அஜித்தின்  படத்துக்கு தலைப்புக்குதான் தாமதமாகும் .அஜித்தின் 56–வது படத்துக்கு என்ன பெயர் வைக்கப் போகிறார்கள்? என்று அவரது ரசிகர்களிடம் பெரும் ajith-vedalamஎதிர்பார்ப்பு இருந்தது. விநாயகர் சதுர்த்தி தினத்தில் பெயர் அறிவிக்கப்படும் என்று முதலில் கூறப்பட்டது.

ஆனால் பெயர் வெளியிடப்படவில்லை. இப்போது அஜித் படத்துக்கு ‘வேதாளம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. யாரும் எதிர்பார்க்காத இந்த பெயரை வைத்தது ஏன் என்பது குறித்து அறிந்து கொள்ள முயன்றபோது…

சுருதிஹாசன், லட்சுமிமேனன், சூரி ஆகியோருடன் நடிக்கும் அஜித், மொட்டை தலை, காதில் கடுக்கன், கழுத்தில் பெரிய சங்கிலியுடன் காட்சி அளிக்கும் படம் வெளியாகி உள்ளது. இந்த கெட்டப்பில் வரும் அஜித்தின் பெயர் வேதாளம். தாதா போன்று காட்சி அளிக்கும் அவரது ‘பிளாஷ்பேக்’ கதையாக வருவதாக கூறப்படுகிறது. இதில் அஜித் பெயர் வேதாளம். எனவே தான் படத்துக்கு ‘வேதாளம்’ என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள் என்ற தகவல் தெரியவந்தது.

ஏற்கனவே ராகவா லாரன்ஸ் ‘வேதாளம்’ என்ற பெயரை பதிவு செய்து வைத்திருந்தார். புது இயக்குநர் ஒருவர் எழுதிய ‘வேதாளம்’ என்ற கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்கவும் முடிவு செய்திருந்தார். இப்போது அவர் வேந்தர் பிலிம்ஸ் சார்பில் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

எனவே, ராகவா லாரன்ஸ் பதிவு செய்து வைத்திருந்த ‘வேதாளம்’ என்ற பெயரை அஜித் படத்துக்காக விட்டுக் கொடுத்து விட்டார் என்ற தகவலும் இப்போது வெளியாகி இருக்கிறது.