இந்தியில் அறிமுகமாகும் சஞ்சனா சிங்

IMG_5128மும்பையை சேர்ந்த சஞ்சனா சிங்தமிழில்தான் முதன்முதலாக அறிமுகமானார். இவர் தமிழில் ‘ரேணிகுண்டா’, ‘ரகளைபுரம்’, ‘வெற்றிச்செல்வன்’, ‘அஞ்சான்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் .தொடர்ந்து தமிழ் படங்களையே தேர்வு செய்து நடித்து வந்தார். வேறு எந்த மொழிகளிலும் இவர் அவ்வளவாக நடிக்கவில்லை.

இவர் தற்போது இந்தி படமொன்றில் நடித்துள்ளார். மும்பையைச் சேர்ந்தவர் என்றாலும், இவர் இந்தியில் அறிமுகமாகும் முதல் படம் இதுதான். இவர் நடிக்கும் அந்த படத்திற்கு ‘தோடா லுப்த் தோடா இஷ்க்’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில், இவருடன் ஹித்தேன் தேஜ்வாணி, சுஸ்மிதா முகர்ஜி, நேஹா பவர், ராஜ்பால் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை முழுக்க முழுக்க காதல் மற்றும் காமெடி கலந்து இயக்கியுள்ளார் சச்சின் குப்தா. விக்ரம் கஜீரியா இசையமைத்துள்ளார். தேபாஷிஸ் பானர்ஜி ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

இப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக, இப்படத்தின் நாயகன் ஹித்தேன் தேஜ்வாணி, ராஜ்பால், நடிகைகள் நேஹா பவர், சஞ்சனா சிங் உள்ளிட்டோர் பத்திரிகையாளர்களை சந்தித்து, படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

அப்போது சஞ்சனா சிங் பேசும்போது, ”நான் சினிமாவுக்குள் நுழைந்து 7 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், தற்போதுதான் முதன்முதலாக இந்தியில் நடிக்கிறேன். முதன்முதலில் இந்தியில் நடிப்பதால் எனக்குள் சிறு பயம் இருந்தது. ஆனால், படக்குழுவினர் என்னிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டது அந்த பயத்தை போக்கியது.

இப்படத்தில் நான் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறேன். இந்த பாடல் இந்தியில் பெரிய ஹிட்டான பாடல்களின் வரிசையில் ஒன்றாக இருக்கும். ‘ ‘என்றவர்,தொடர்ந்து தனது படத்திற்கு ஆதரவளித்துவரும் ரசிகர்கள் இந்த படத்திற்கும் ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார். .