எதிர்பார்ப்புடன் காத்திருக்கும்’ஒரு கிடாயின் கருணை மனு’

okkm1நியூயார்க் நகரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் ஈரோஸ் நிறுவனம் தயாரித்த, விதார்த் நடித்த, புதிய இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கிய ” ஒரு கிடாயின் கருணை மனு” திரைப் படத்துக்கு பிரம்மாண்டமான வரவேற்பு.

படத்தை பார்த்த இந்திய வம்சாவளியினர் இந்தப் படம் இந்திய திரைப் பட துறைக்கு  சர்வதேச அளவில் தரமான படங்கள்  தர வல்லமை மிகுந்தது என மிகப் பெரிய பெயர் ஈட்டித் தரும் என நம்பிக்கை தெரிவித்தனர். நமது மண்ணின் பெருமையையும், குணத்தையும் சார்ந்த “ஒரு கிடாயின் கருணை மனு” தமிழர்களுக்கு உலக அளவில் பெருமை சேர்க்கும் என படத்தை பார்த்த சர்வதேச படக் குழுவினரும் தெரிவித்தனர்.படப்புடிப்பு குழுவினரை பாராட்டிய விழாக் குழுவினர் ‘ இத்தகைய நேர்த்தியம்,  கள்ளம் கபடம் இல்லாத நகைச்சுவையும் தமிழக  ரசிகர்களை மட்டுமின்றி எல்லோரையும் கவரு okkm2ம் வல்லமை உடையது என பாராட்டினர்” என பெருமையுடன் கூறினார் ஈரோஸ் சவுத் நிறுவனத்தை சார்ந்த சாகர்.