ஏப்ரல் 7 ம் தேதி வெளியாகிறது ‘விருத்தாசலம்’  

 

VIRU2லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பி.செந்தில்முருகன் தயாரிக்கும் படத்திற்கு ‘விருத்தாசலம்’ என்று பெயரிட்டுள்ளனர்.

 

இந்த படத்தில் விருதகிரி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் கச்சிராயநத்தம் என்ற கிராமத்தின் தலைவராக இருந்த போது அவரது சிறந்த நிர்வாகத்திற்காக ஜனாதிபதி பிரதீபா பாட்டிலிடம் விருது பெற்றவர்.  கதாநாயகிகளாக ஸ்வேதா, சமீரா, ஷெரீன் தாஹா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சம்பத்ராம், பாவாலட்சுமணன், காதல்சரவணன், வெண்ணிலா கபடிக்குழு ஜானகி, மதுபானக்கடை ரவி, நெல்லை சிவா, ஆர்.என்.ஆர்.மனோகர், சுதா,இளங்கோ, அபிஷேக், நிருபமா, டைரக்டர் நாராயணமூர்த்தி  ஆகியோர் நடிக்கிறார்கள்.

தயாரிப்பு   –  பி.செந்தில்முருகன்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  ரத்தன்கணபதி.

VIRU-1படம் பற்றி இயக்குநர் ரத்தன்கணபதி கூறியதாவது..

“சூழ்நிலை காரணமாக சிறு வயதில் விருதகிரி செய்த குற்றத்திற்காக. பதினான்கு வருடம் சிறை தண்டனை அனுபவிக்கிறான். வெளியே வரும் அவன் இளமையை இழந்து பெற்ற தாயையும் இழந்து காதலியையும் இழக்க நேரிடுகிறது.

 

ஆனாலும் நேர்மையாக வாழ வேண்டும் என்கிற கொள்கையை மட்டும் அவன் இழக்க வில்லை. அவனது நேர்மைக்கு கிடைத்த பரிசு என்ன என்பதுதான் இந்த படத்தின் வாழ்வியல் கதை!

கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம் ஏப்ரல் 7 ம் தேதி வெளியாக உள்ளது என்றார்” இயக்குந ர் ரத்தன்கணபதி.