‘கருமேகங்கள் கலைகின்றன’ பாடல்கள் பார்த்து வியந்த ஜீ.வி.பிரகாஷ்!

பாடல்களை பார்த்து வியந்த ஜீ.வி.பிரகாஷ்! ‘கருமேகங்கள் கலைகின்றன’

பாரதிராஜா,யோகி பாபு,கௌதம் வாசுதேவ் மேனன் , அதிதி பாலன் மற்றும் பலர் நடித்து வரும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றது.
இதன் 5பாடல்காட்சிகளை இதன் இசை அமைப்பாளார் ஜீ.வி.பிரகாசிடம் போட்டுக் காட்டியுள்ளார் தங்கர் பச்சான். பாடல்களைப் பார்த்து வியந்து போனார் ஜீவி.

“அழகியை பார்த்து வியந்திருக்கிறேன். நம்ம இசைக்கு இப்படி ஒரு வாழ்வியல் படம் கிடைக்காதா என்று ஏங்கியதுண்டு. அது இந்த ‘கருமேகங்கள் கலைகின்றன’ படம் மூலம் நிறைவேறியதாக கருதுகிறேன் ” என்றாராம்.

அவர் தனது எதிர்பார்ப்புகளுக்கு மேலாக முழு மன நிறைவும், பெருத்த மகிழ்வும் அளிப்பதாகக் கூறினார்.

” மனம் வருடும் இன்னிசைப் பாடல்களும்,காட்சிப் படிமங்களும் என் படைப்பின் மீது நம்பிக்கைக் கொண்டுள்ளவர்களின் எண்ணங்களை ஈடு செய்யும் என நம்புகிறேன்”என்றாராம் ஜி.வி.

ஜி.வி.பிரகாஷ் – வைரமுத்து இணைந்து 5பாடல்களை கொடுத்துள்ளனர்.