குழந்தைகளின் தன்னம்பிக்கை என்னை மெருகேற்றியது : நடிகை சாக்‌ஷி அகர்வால்!

முழு நேர நடிப்பில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டாலும், தனக்கான நேரம் கிடைக்கும் சமயத்தில் சமூக அக்கறை கொண்ட நிகழ்வுகளிலும் ஆர்வம் காட்டுபவர் நடிகை சாக்‌ஷி அகர்வால்.

நடிப்பில் பன் முகங்கள் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்தாலும் நிஜத்தில் சாந்த குணம் கொண்ட நடிகை சாக்‌ஷி அகர்வால் சமீபத்தில் ஆட்டிசம் குறைபாடு கொண்ட குழந்தைகளின் இல்ல காப்பகத்திற்கு சென்று அவர்களுடன் சில நேரம் கொண்டாடினார்.

அந்த குழந்தைகளுடன் சிரித்து பேசி அவர்களையும் மகிழ்வித்து பின்னர் அவர்களுக்கு பொருட்களை பரிசளித்தார்.

“குழுந்தைகளின் அன்பில் கரைந்த போனேன், இவர்களின் பொன் சிரிப்பும், தன்னம்பிக்கையும் என் வாழ்வை மேலும் மெருகேற்றியது” என்றார் நடிகை சாக்‌ஷி அகர்வால்