சமுத்திரக்கனி நடிப்பில் தெலுங்கு தமிழில் உருவாகும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!

ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் நிறுவனத்தின் பிரபாகர் ஆரிபாக வழங்கும் ,
ப்ருத்வி போலவரபு தயாரிப்பில்,
பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ்
கொரனானி இயக்கும் , இருமொழி திரைப்படம் ஹைதரபாத்தில் பூஜையுடன் தொடங்கியது .

டியர் காம்ரேட் திரைப்பட இயக்குநர் பரத், மற்றும் , இயக்குநர் சுப்பு, சிவபாலாஜி கிளாப் அடித்து தொடக்கிவைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சுதீர், சம்மக் சந்திரா, தாகுபோத்து ரமேஷ், மது நந்தன், கயூம், பூபால், பிரித்வி, ராக்கெட் ராகவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அப்பா மகன் என்ற உணர்வுபூர்வமான கோணத்தில் உருவாகும்
இத்திரைப்படம் , இதுவரை யாராலும் சொல்லப்படாத தனித்துவமான
கருத்தைக் கொண்டிருக்கும் கதையாக உருவாகிறது.

நவம்பர் 9ம் தேதி ஹைதராபாத், சென்னை, மதுரை தேனி, திண்டுக்கல் போன்ற இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடவிருக்கிறார்கள் குழுவினர்.

விமானம் படத்தின் இயக்குநர் சிவபிரசாத் இந்த படத்திற்குக் கதை எழுதியுள்ளார்.

இசை- அருண் சிலுவேறு,
ஒளிப்பதிவு – துர்கா பிரசாத்
கலை – டௌலூரி நாராயணா.
வசனம் – மாலி
படத்தொகுப்பு – மார்த்தாண்டம் வெங்கடேஷ்.
நிர்வாகத் தயாரிப்பாளர் தீபிரெட்டி மஹிபால் ரெட்டி .எழுதி இயக்கியுள்ளார் தன்ராஜ் கொரனானி.