த(க)ண்ணீரும் சோகமும் வடியும் வரை…நடிகர் பார்த்திபன் !

நடிகர் பார்த்திபன் தனது மனிதநேய மன்றங்கள் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார். அவர் இது பற்றிக் கூறியிருப்பதாவது,

‘இயன்றதை அனைவரும் செய்வோம்.
இன்று மதியம் சைதை பனகல் மாளிகை அருகே,
சுவையான உணவு வழங்கினோம்.அவர்கள் பசியின் தாக்கம் என்னைத் தின்றது.நான் ஒரு குட்டியானை எனப்படும் மூனேமுக்கால் சக்கர வாகனத்தில் சென்றேன்.எனவே சுருங்கிவிட்டது என் பயணமும் பயனாளிகளும். படகு இருந்தால் மட்டுமே பல பகுதிகளுக்கு செல்ல முடியும்.

ஆகையால்,

நாளை அதற்கான முயற்சி. நாளைய விஞ்ஞான வளர்ச்சியை பெருமையாக பார்க்கும் நாம்,அதையெல்லாம் துடைத்து தூர போட்டுவிட்டு, தனியொருவனுக்கு(அதுவும் தண்ணீர் வயிறளவு ஓடும் போது)உணவில்லையெனில்…..

வெட்கக்கேடு!ஜெய்ஹிந்த்!’