தயாரிப்பாளர் மிரட்டுகிறார்: விஜய்சேதுபதி புகார்

தன்னை தயாரிப்பாளர்  மிரட்டுவதாக  நடிகர்vijay-sethupathi2 விஜய்சேதுபதி புகார் கொடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்திரையுலக பத்திரிக்கை நண்பர்களுக்கும், தமிழ்திரை உலகிற்கும் எனக்குஆதரவு அளித்துவரும்               தமிழ் ரசிகர்களுக்கும் எனது அன்பான வணக்கம்.
ஆர்.கே.சுரேசின் ஸ்டுடியோ 9 என்ற நிறுவனத்தில் ‘வசந்தகுமாரன்’ என்ற திரைப்படத்தில் நான் நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டது உண்மையே. ஆனால் ஆர்.கே.சுரேசின் தவறுதலான நடவடிக்கைளின் காரணமாகவும் அவரின் தகாதவார்த்தைகளின் காரணமாகவும்  நான் வசந்தகுமாரன் திரைப்படத்திலிருந்து கடந்த ஆறுமாதங்களுக்கு முன்பே விலகிக்கொள்வதாகவும் நான்வாங்கியரூ. 9 லட்சம் அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் சேர்த்து தருவதாகவும் அன்றே கூறிவிட்டேன்.

ஆனால்ஆர்.கே.சுரேஷ் என்னிடம் பல கோ டிகேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்தார். மேலும் சில மர்ம நபர்கள் மூலம் எனக்கு மிரட்டல்களும் வந்துகொண்டு இருந்தன. இதைத் தொடர்ந்து நடிகர்சங்கத் தலைவர்சரத்குமாரிடம் புகார் அளித்தேன்.அதன் பிறகு தயாரிப்பாளர்ச ங்கம், நடிகர்சங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தபோது என்னுடைய தரப்பு நியாயங்களை எடுத்துரைத்து வசந்தகுமாரன் திரைப்படத்தில் இருந்து முழுவதுமாக என்னை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

இதே கருத்தை வலியுறுத்தி நடிகர்சங்கத்தில் மீண்டும் ஒருபுகார் கடிதம் ஒன்றையும் கொடுத்துள்ளேன்.

இந்நிலையில் இன்றையதினம் நாளிதழ் ஒன்றில் நான்நடிப்பதாக வசந்தகுமாரன் திரைப்படத்தின் விளம்பரம்வந்துள்ளதைகண்டு அதிர்ச்சி அடைந்தேன்.இதுபோன்றசெயல்கள் எனதுவளர்ச்சியைத் தடுக்கும்நோக்கத்துடனே திட்டமிட்டு செயல்படுத்தப்படுவதாக அறிகிறேன். நான் தற்போது எஸ்.பி.ஜனநாதன்இயக்கத்தில் ’புறம்போக்கு திரைப்படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் தயாரிப்பில் ’நானும்ரவுடிதான்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறேன். இந்நிலையில் வசந்தகுமாரன் திரைப்படம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவந்துள்ள செய்தியைக் கண்டு மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.

இதுபோன்ற செயல்களில் ஸ்டுடியோ 9 நிறுவனத்தின்உ ரிமையாளர் ஆர்.கே.சுரேஷ் தொடர்ந்து ஈடுபடுவாரேயானால் அவர்மீது சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுப்பேன்எ ன்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இப்பிரச்சினையில் நடிகர்சங்கமும், தயாரிப்பாளர்சங்கமும் என்னைப்பாதுகாக்கும்என்ற நம்பிக்கையுடன் காத்துக்கொண்டு இருக்கிறேன்.
இவ்வாறு நடிகர் விஜய்சேதுபதி அதில் கூறியுள்ளார்.