தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

தென்னிந்திய பத்திரிகை தொடர்பாளர் யூனியன் தேர்தலில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவியேற்பு விழா
இன்று பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.தலைவராகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட என். விஜயமுரளி,செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
ஆ. ஜான்,பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பி.யுவராஜ், துணைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கோவிந்தராஜ், வி.கே.சுந்தர்,இணைச் செயலாளர்களாகத்
தேர்ந்தெடுக்கப்பட்ட கே.செல்வகுமார், ஆர்.வெங்கட் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என அனைவரும் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.  

தேர்தல் அதிகாரி சங்கர் வெற்றிச் சான்றிதழ் கொடுத்து வாழ்த்தினார். இந்நிகழ்வில் பெப்ஸியின் தலைவர் ஆர்.கே. செல்வமணி,
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தைச் சேர்ந்த செயலாளர் ஆர். வி உதயகுமார்,பொருளாளர் பேரரசு, புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஸ்டில்ஸ்  ஜெயராமன்  தமிழ்நாடு பத்திரிகை தொடர்பாளர் யூனியனின் முன்னாள் தலைவர் டைமண்ட் பாபு ,பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தினார் .