தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கமல் ஒரு கோடி நிதி!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர், மூத்த நடிகர் உலக நாயகன் திரு.கமல்ஹாசன் அவர்கள் இன்று (09.03.24) அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளான பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோரிடம் நடிகர் சங்க கட்டட பணியைத் தொடர்வதற்காக சங்கத்துக்கு வைப்பு நிதியாக ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார்.

காசோலையைய் பெற்று கொண்ட நடிகர் சங்க நிர்வாகிகள், கமல் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.