“ நட்பதிகாரம் – 79 “ படத்திற்காக தேவா பாடிய பாட்டு !

deva33ஜெயம் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டி.ரவிகுமார் பிரமாண்டமாக தயாரிக்கும் படம்                 “ நட்பதிகாரம் – 79“  .இந்த படத்தில் கதாநாயகனாக ராஜ் பரத், அம்ஜத்கான் இருவரும்   நடித்திருக் கிறார்கள்.

கதாநாயகிகளாக ரேஷ்மி மற்றும் தேஜஸ்வி நடிக்கிறார்கள்.  மற்றும் M.S.பாஸ்கர், பஞ்சு சுப்பு, வினோதினி மற்றும் பலர் நடிக்கிறார்கள். கலக்கப் போவது யாரு விக்னேஷ் கார்த்திக் காமெடியனாக அறிமுகம் ஆகிறார்.

ஒளிப்பதிவு   –     R.B.குருதேவ்  , இசை    –     தீபக் நிலம்பூர்

எடிட்டிங்    –   சாபு ஜோசப். இவர்  சென்ற வருடம் தேசிய விருது வென்றவர்.

பாடல்கள்    –     கபிலன், ரவிச்சந்திரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்  –  ரவிச்சந்திரன்.

நட்பதிகாரம் படத்திற்காக  இயக்குநர் ரவிச்சந்திரன் எழுதிய

“  சொல்லு சொல்லு   சொல்லம்மா –  நீ

உண்மை உண்மை    சொல்லம்மா “  என்ற பாடல்  தீபக் நிலம்பூர்  இசையில் தேவா  பாட  இன்று  பதிவு செய்யப்பட்டது.