முதலமைச்சர் நிவாரண நிதி: ‘லைகா’ நிறுவனம் வழங்கிய 2 கோடி நிதி உதவி!

கொரோனா நிவாரண நிதிக்காக ஏராளமானோர் நிதி வழங்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார்.அதன்படி பலரும் முதல்வர் நிவாரண நிதியை வழங்கி வருகிறார்கள்.லைகா நிறுவனமும் தாராளமாக நிதி வழங்கியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலினை இன்று (19.6.2021) தலைமைச் செயலகத்தில், ‘லைகா புரோடக்சன்ஸ்’ சுபாஸ்கரன் சார்பில் அதன் முதன்மைச் செயல் அலுவலர் ஜி.கே.எம். தமிழ்க்குமரன், இயக்குநர் ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் கெளரவ் சச்ரா ஆகியோர் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். உடன் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினும் இருந்தார்.
கிள்ளிக் கொடுப்பவர்கள் மத்தியில் லைகா அள்ளி வழங்கி இருக்கிறார்கள்.

லைக்கா புரொடக்சன்ஸ் ஏற்கெனவே முதல்வர் நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாய் கொடுத்தது நினைவிருக்கலாம்.மீண்டும் இரண்டாவது முறையாக தாராளமாக இதை வழங்கியிருக்கிறார்கள்.