மூன்றே நாளில் ஐந்தே கால் கோடி ரூபாய் :வசூல் வேட்டையைத் தொடங்கிய ‘ஃபைட்கிளப்’ திரைப்படம்!

ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தலின் போது அரசியல் கட்சிகளுக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் விவாதங்கள் இருந்தாலும் இறுதியில் மக்கள் அளிக்கும் தீர்ப்பே மகத்தான முடிவாக இருக்கும். அது போல் தான் ஒரு திரைப்படத்தின் திரையரங்கு திரையீட்டிலும் ரசிகர்கள் அளிக்கும் தீர்ப்பு தான் இறுதி தீர்ப்பாகும்.

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உறியடி விஜயகுமார், மோனிஷா மோகன் மேனன், கார்த்திகேயன் சந்தானம், சங்கரதாஸ், அவினாஷ் ரகுதேவன், சரவணன் ஜெயராஜ், வடசென்னை அன்பு ஆகியோர் நடித்து அப்பாஸ் அ.ரஹ்மத் இயக்கி அண்மையில் வெளிவந்துள்ள படம் ‘ஃபைட்கிளப்’  .ஒளிப்பதிவு லியோன் பிரிட்டோ,இசை கோவிந்த் வசந்தா. இப்படத்திற்கு விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு பெற்றுள்ளது.
ஜனநாயகத்தில் மக்கள் அளிக்கும் தீர்ப்பைப் போல் திரையரங்குகளில் ரசிகர்கள் பரபரப்பான வரவேற்பை அளித்து வெற்றித் தீர்ப்பை எழுதி உள்ளனர்.குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் படத்திற்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தப் படம் வெளியான முதல் நாளே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளள நிலையில் வெளியான  மூன்றே நாட்களில் ஐந்தே கால் கோடி ரூபாய் வசூல் செய்து ஒரு பரபரப்பான வசூல் வேட்டையைத் தொடங்கி இருக்கிறது. இன்னும் பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.