‘வாலு’ படம் வெளியானதே வெற்றிதான்: டி.ராஜேந்தர்

tr2‘வாலு’ படத்தின் வெளியீடு மற்றும் வெற்றிப் பாதையில் செல்வதை முன்னிட்டு டி.ராஜேந்தரும் சிம்புவும் ஊடகங்களைச் சந்தித்தனர். செய்தியாளர்களிடம்   டி.ராஜேந்தர்
பேசும் போது.

“ஒரு படம் ஒடி வசூல் செய்தால் வெற்றிப் படம் என்பார்கள். ‘வாலு’ படத்தைப் பொறுத்தவரை  படம் வெளியானதே வெற்றி என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் படம் வெளியாவதற்கு முதல்நாள் முதல் அவ்வளவு பிரச்சினைகள். இது வரவே போவதில்லை  என்று பேசிக் கொண்டார்கள். சிலர் மும்முரமாக செயல் பட்டார்கள். விஜய், தாணு போன்ற பலரும் வாலு வெளியாக வேண்டும் என்று விரும்பினார்கள். உதவி செய்தார்கள். விஜயின் ‘தலைவா’ படம் பிரச்சினை வந்த போது உங்கள்பின் நாங்கள் இருப்போம் என்று சிம்பு ட்வீட் போட்டார். அந்த நன்றியை மறவாத விஜய் ‘வாலு’  வெளிவர உதவியிருக்கிறார். அவரது பெருந்தன்மைக்கு நன்றி. என்றார்.