விளையாட்டில் உள்ள அரசியலைப் பேசும் ‘ எண். 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு’

பி.எஸ்.எஸ்.புரொடக்ஷன்ஸ்_ மற்றும் உத்ரா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘எண் .6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு’ . இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் உலகம் எங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது .

மேலும் இத்திரைப்படத்தினை தெரு நாய்கள்,படித்தவுடன் கிழித்து விடவும், கல்தா ,வில்வித்தை ஆகிய படங்களைத் தயாரித்து இயக்கிய இயக்குநர்
செ.ஹரி உத்ரா  எழுதி இயக்கியுள்ளார். ஒரு தயாரிப்பாளராகவும்எஸ். பிரீத்தி சங்கருடன் இணைந்துள்ளார்.

கிராமங்களில் இருந்து இந்திய அளவிலும் ,சர்வதேச அளவிலும் கால்பந்து விளையாட்டில் முத்திரை பதிக்கத் துடிக்கும் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் எவ்வாறு கால்பந்து விளையாட்டில் தங்களுக்கான இடங்களைத் திறமையின் மூலம் பிடிக்க முயல்கின்றனர்
என்பதைப் பின்னணியாக வைத்து அதற்குப் பின்னால் உள்ள அரசியலை இத்திரைப்படம் பேசுகிறது.

இத்திரைப்படத்தில் அதிகாரவர்க்கம் ,ஒடுக்கப்பட்டவர்களை எவ்வாறு அவர்களுடைய திறமைகளை ஒடுக்கி அவர்களைத் தங்களுடைய மேல் நிலையை அடைய முடியாமல் தவிர்க்கும் போக்கை மேற்கொள்கின்றனர் என்பதைப் படத்தின் மையக்கருவாக ஆழமாக இயக்குநர் பதிவு செய்துள்ளார் ,மேலும் இத்திரைப்படத்தில் சரத் அறிமுக கதாநாயகனாகவும் அயிரா கதாநாயகியாகவும் கஞ்சா கருப்பு,அருவி மதன் மற்றும் சோனா ஹைடன் ,நரேன் ,
இளையா, எஸ் .எம். டி கருணாநிதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.. ஒளிப்பதிவு வினோத் ராஜா ,இவர் வேல்ராஜ் ஒளிப்பதிவாளரின் உதவியாளராக இருந்துள்ளார். இசை – AJ Alimirzaq ,எடிட்டிங் கிஷோர் மற்றும் பாடல்களை வித்யாசாகர் ( குவைத் )மற்றும் பா. இனியவன், செ. ஹரி உத்ரா ஆகியோர் எழுதியுள்ளனர் .

இத்திரைப்படம் பரமக்குடி, மதுரை ,ராமநாதபுரம் பகுதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.சுமார் 300-க்கும் மேற்பட்ட நிஜ கால்பந்து விளையாட்டு வீரர்களை உருவாக்கிப் படப்பிடிப்பினை மேற்கொண்டுள்ளனர் படக் குழுவினர்…

மேலும் இத்திரைப்படத்தில் இரவு நேரக் காட்சிகள் சுமார் ஒரு 30 நாட்களுக்கும் மேலாக பரமக்குடியைச் சுற்றி உள்ள கிராமப்புறங்களில் நடத்தியுள்ளனர் ,படத்தின் சண்டைக் காட்சிகளும் ,பாடல் காட்சிகளும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளன.