நயன்தாராவை முதன் முதலில் இங்கேதான் சந்தித்தேன்! – விக்னேஷ் சிவன் !

நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9 ஆம் தேதி படு பரபரப்பாகவும் நடந்து முடிந்தது. கடந்த 7 ஆண்டுகளாகக் காதலித்து வந்த இந்த காதல் ஜோடியின் திருமணம் தமிழ் சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்டது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் திருமணத்தை நடத்தினார்கள்.

ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, கார்த்தி, விக்ரம் பிரபு உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொண்டு மணக்களை வாழ்த்தினார்கள்.

திருமணம் முடிந்ததும் தம்பதியினர் திருப்பதி சென்று வெங்கடாசலபதியை தரிசனம் செய்தனர். அங்கிருந்து சென்னை புறப்பட்டவர்கள், மறுநாள் ஜோடியாக பத்திரிகையாளர்களை சந்தித்து, தங்களது சினிமா பயணத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த ஊடகத்தினருக்கு நன்றி தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய நயன்தாரா, ”இதுவரை என சினிமா பயணத்தில் ஒத்துழைப்பு கொடுத்து என் வளர்ச்சிக்கு பெரிய பங்கு வகித்திருக்கிறீர்கள். உங்கள் ஆசியுடன் இல்லவர வாழ்வில் இணைகிறேன், உங்களை ஆசி எங்களுக்கு எப்போதும் வேண்டும், நன்றி” என்றார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசுகையில், “நான் நயன்தாராவை முதன் முதலில் சந்தித்துக் கதை சொன்ன இடம் இது தான். அதனால் தான், நயன்தாராவும், நானும் உங்களை இங்கே சந்தித்திருக்கிறோம். இந்த இடமும், நீங்களும் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் நன்றி.” என்றார்.

.