அப்பாவான அனுபவம் : சந்தோஷ வயலின் வாசிக்கும் ஜிப்ரான்!

gybran1இசை அமைப்பாளர் ஜிப்ரான் உச்ச கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். ‘வாகை சூடவா’ படத்தில் ‘சர சர சார காத்து’ என்ற பாடல் மூலம் பரிச்சயம் ஆனா இவர்,உலக நாயகன் கமலஹாசனோடு தொடர்ந்து இரண்டு படங்கள் மூலம் இசை அமைப்பாளராக பணி புரிவதன் மூலம் தென்னிந்தியாவின் முதல் தர இசை அமைப்பாளர்களில்  ஒருவராக உருவெடுத்துள்ளார் . இதற்கெல்லாம் மகுடம் சூடியதை போல் அவருக்கு மேலும் ஒரு நற்செய்தி. நேற்றிரவு  அவர் தந்தை  ஸ்தானத்துக்கு உயர்ந்தார்

.சென்னையில் உள்ள ஒரு மருத்துவ மனையில் நேற்றிரவு அவர் மனைவி ஒரு ஆரோக்கியமான ஆண்  குழந்தையை பெற்றெடுத்தார். பொதுவாக மிகவும் மெல்லிய குரலில் பேசும் ஜிப்ரான் இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் போது ‘ இது என் வாழ்வில் மறக்க முடியாத நாள்.ஒரு தந்தை என்ற ஸ்தானத்துக்கு உயர்வது எனக்கு மிகவும் பெருமை. தாயும் சேயும் இருவருமே நலம். இந்த தருணத்தில்’உத்தம வில்லன்’ படத்துக்காக பல்கேரியா நாட்டில் சிம்போனி இசை குழுவுடன் பாடல் பதிவு செய்ததையும் , அதன் தொடர்ச்சியாக சர்வதேச Paramount studios அரங்கில் புகழ் பெற்ற ஒலிப்பதிவுக் கூடத்தில் இசை கோர்ப்பு பணியை செய்தேன். சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘ ரன் ராஜா ரன் ‘ படத்தை தொடர்ந்து தெலுங்கில் எனக்கு நல்ல பெயர் கிட்டியதோடு , பல்வேறு பெரிய படங்களுக்கும்  இசை அமைக்க வாய்ப்பு வருகிறது.