என் மகன் நடிக்க நான் எந்த நிர்ப்பந்தமும் செய்யவில்லை: விஜயகாந்த்

IMG_2098விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நாயகனாக நடித்துள்ள படம்’சகாப்தம்’  . அனேகமாக பிப்ரவரியில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா நேற்றிரவு க்ரீன்பார்க் ஓட்டலில் நடைபெற்றது. திரையுலகிலிருந்து திரளான நட்சத்திரங்களும் இயக்குநர்களும் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட மூத்த நடிகர்கள் சண்முகப் பாண்டியனுக்கு அறிவுரை வழங்கினர்.

விஜயகாந்த் பேசும் போது. “என் மகன் நடிக்க வரவேண்டும் என்று நான் எந்த நிர்ப்பந்தமும் செய்யவில்லை. எந்த அறிவுரைகளும் கூறவில்லை. இந்தக் காலத்து பிள்ளைகளுக்கு நாம் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. அவர்களுக்கு எல்லாம் தெரியும்.நம் தலையெழுத்துப்படிதான் எல்லாம் நடக்கும். அதை யாரும் மாற்ற முடியாது. நடிக்க வரும் எல்லாரும் நடிகராக முடியாது கட்சி ஆரம்பிக்கிற எல்லாரும் தலைவராகிவிட முடியாது. மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். நம்மைப் பற்றி நாமே பெரிதாக பேசிக் கொண்டிருக்கக் கூடாது. மற்றவர்கள் சொல்ல வேண்டும்.

என் மகன் நடிக்கும் படத்தின் கதை தேர்வு முதல் நடிகைகள் வரை எல்லாமே அவனது அம்மாதான். நான் படிக்காதவன் மனைவி படித்தவர். அந்த எண்ணம் அவருக்கு எப்போதும் வந்ததில்லை.
இன்று எனது 25 வது திருமணநாள் எங்களுக்குள் நல்ல விட்டுக் கொடுத்தல் குணம் இருப்பதால் நல்லபடியாக போய்க் கொண்டு இருக்கிறது.

நான் இங்கு அரசியல் பேச விரும்பவில்லை. நான் எந்த விழாவுக்கும் போவதில்லை. காழ்ப்புணர்ச்சியில் அரசியலாக்கி விடுகிறார்கள். ஆனாலும் கோபப்படுவதில்லை. கோபப்பட்டு என்ன ஆகப் போகுது . என் பையன் சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு போவதாக அறிந்தேன். சந்தோஷம். இந்தப் படத்துக்கு பல பேர் உழைத்திருக்கிறார்கள். எல்லாரையும் வாழ்த்த வேண்டும் “என்று பேசினார்.

விழாவில் நடிகர்கள் பிரபு, விக்ரம்பிரபு, சத்யராஜ், சிபிராஜ், எடிட்டர்மோகன், ஜெயம்ரவி, பி,வாசு, ஷக்தி,
சிவகுமார், நெப்போலியன், வாகை சந்திரசேகர், நாசர், பவர்ஸ்டார், ஜெய், கருணாஸ், விமல், விஜயகுமார், சண்முகராஜன், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம்புலி,  இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன்,கஸ்தூரிராஜா, ஆர்.கே.செல்வமணி, பார்த்திபன், பாண்டியராஜன், எஸ்.ஏ.சந்திரசேகரன், சுந்தர்.சி, கௌரவ், கங்கை அமரன், கே.எஸ்.ரவிகுமார், மகிழ்திருமேனி, நலன் குமாரசாமி,  நடிகைகள் தேவயானி, குட்டி பத்மினி, நேஹா ஹிங், சுப்ரா ஐயப்பா தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் மற்றும் ‘சகாப்தம்’ படக்குழுவினரான  தயாரிப்பாளர்எல்.கே.சுதீஷ், இயக்குநர் சுரேந்திரன், இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா,ஸ்டண்ட் மாஸ்டர் ராக்கி ராஜேஷ், வசனகர்த்தா ஆர்.வேலுமணி, ஆர்ட் டைரக்டர் ஜே கே. ஒளிப்பதிவாளர் பூபதி ,கவிஞர் விவேகா, பிரேமலதா விஜயகாந்த்  ஆகியோரும் கலந்து கொண்டனர்.