கூலிப்படை பற்றிய 237 வது படம் ‘கே 3’ ?

காமதேனு இண்டர்நேசனல் படநிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக K3 “ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் விமல்ராஜா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆதிரா நடிக்கிறார். மற்றும் விஸ்வாந்த், சுதிர், பாவாலட்சுமணன், மீசை ராஜேந்திரநாத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இசை   –    பிரத்வய் சிவசங்கர் ( இவர் ஏ.ஆர்..ரகுமான் இசை பள்ளியின் மாணவர்.

பாடல்கள்    –  இயக்குநர் ரவிசங்கர், கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம்  –  எம்.எஸ்.அண்ணாதுரை

படம் பற்றி இயக்குநர் எம்.எஸ்.அண்ணாதுரை கூறியாதவது…

”இரவு நேரங்களில் போஸ்டர் ஒட்டும் கதிர், கஞ்சா, கருப்பு என்ற மூன்று இளைஞர்களின் வாழ்க்கை தான் இந்த படம் அதனால் தான் இந்த படத்திற்கு “ K 3 “ என்று பெயர் வைத்துள்ளோம்.

அந்த மூன்று இளைஞர்கள்  கூலிப்படையாக எப்படி மாறுகிறார்கள் என்பது தான் இந்த படத்தின் திரைக்கதை. இன்று நாட்டில் கூலிப்படை வேலை செய்வது  பெரும்பாலும் பதினெட்டு வயது முதல் இருபத்தைந்து வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தான் இருகிறார்கள். அவர்கள் கூலிப்படையாக மாறஃ காரணம் அவர்களது சூழ்நிலைதான். அதைதான் இதில் சொல்கிறோம்.

காதல் மற்றும் திரில்லர் படமாக உருவாகி உள்ளது இந்த படம்.

படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, கேரளா, சென்னை, சேலம் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

இந்த படத்தை பார்த்த கன்னட தயாரிப்பாளர் ஒருவர் இந்த படத்தின் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்யும் உரிமையை வாங்கிவிட்டார் அது எங்கள் படத்திற்கு கிடைத்த வெற்றியாக நாங்கள் கருதுகிறோம்.

படம் இம்மாதம் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது ”என்றார் இயக்குநர்.அனேகமாக இது கூலிப்படை பற்றிய 237 வது படமாக இருக்கலாம்