பார்வையாளர்களின் நிலையிலிருந்து எழுதப்பட்ட கதை’களம்’

பார்வையாளர்களின் நிலையிலிருந்து எழுதப்பட்ட கதைதான்’களம்’ அருள் மூவீஸ் பி. கே . சந்திரன் தயாரிப்பில்உருவாகியுள்ள’களம்’படத்தை புதுமுகஇயக்குநர்ராபர்ட்.எஸ். ராஜ்இயக்கி  உள்ளார்.சூபீஷ்.கே சந்திரன் கதை,திரைக்கதைமற்றும் வசனம்எழுத,’ஆந்திரமெஸ்’ என்ற படத்தின் மூலம் ஒளிபதிவாளராக  அறிமுகமாகும்  முகேஷ் ஒளிப்பதிவு செய்ய kalam2,இசையமைத்துள்ளார் பிரகாஷ்நிக்கி.

ஒரு வீட்டைமையமாகக் கொண்ட  இப்படத்தின்  போக்கை ஆறு முக்கிய   கதாபாத்திரங்களாக  ‘வெண்ணிலா கபடிகுழு’ ஸ்ரீநிவாசன் , ‘சுட்டகதை’  நாயகி லக்ஷ்மிபிரியா, ‘கோலிசோடா’ மதுசூதனன், SS Music பூஜா, ஹம்ஜத் மற்றும்  கனிநடித்துள்ளனர்.

இயக்குநர் ராபர்ட்  இப்படத்தின் கதையைப் பற்றிகூறியதாவது, “இப்படம் வழக்கமான திரைக்கதையிலிருந்து வித்தியாசமாக இருக்கும். இக்கதை  எந்த வகையானதுஎன்று கணிப்பது கஷ்டம்.இப்படத்தின் கதைக்கருதான்  இப்படத்தை இயக்கத் தூண்டியது. இது நல்ல தரமான படமாக அமைய இரவு பகலென உழைத்திருக்கிறோம். இப்படம் கண்டிப்பாக ரசிகர்களை மகிழ்விக்கும்”,  என்றுகூறினார். இவர் ‘நான்’ புகழ் ஜீவாசங்கரின் இணை இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

சூபீஷ் கே சந்திரன் இக்கதையைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது ” இக்கதை  முழுக்க முழுக்கப்  எளிதில்புரியக்கூடியதாகவும் , நிறைய ஆச்சரியமூட்டும் விஷயங்களுடன் படமாக்கப்பட்டுள்ளது”, என்றார்.

kalam3” ஒருவீட்டுக்குள்ளே பலவித்தியாசமான கோணங்கள் காட்டப்பட வேண்டியதாயிற்று, அது பெரும் சவாலாக அமைந்தது. இப்படத்தின் காட்சிகள் ரசிகர்களுக்கு ஒருபுதியஅனுபவமாகஇருக்கும்” எனக் கூறினார் ஒளிப்பதிவாளர்முகேஷ்.

கலைஇயக்குநர் செந்தில்ராகவன் கூறுகையில்”இக்கதையில்வரும்  வீட்டைப் பழமையானதாகவும்,புதுபொலிவுடனும் காட்டவேண்டியிருந்தது, அதற்கு , அதிகஉழைப்பும் தேவைபட்டது”, என்றார்.

இப்படம் தங்களுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என நம்பிக்கையாக இருக்கின்றனர் முக்கியகதாபாத்திரத்தில் நடித்த  ஸ்ரீநிவாசன் ,  லக்ஷ்மிபிரியா ஆகியோர்.குறுகியகாலத்தில் மிகவும்  நேர்த்தியாகத் திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த  ஜனவரி மாதம்திரைக்கு வரும்  எனஉறுதி படக்கூறினர் படப்பிடிப்புக் குழுவினர்.