போய் வா தம்பி !- சிவகுமார் இரங்கல்!

எஸ்.பி பி மறைவு குறித்து சிவகுமார் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

அரை நூற்றாண்டுக்கும் மேலாக
எத்தனை ஆயிரம் பாடல்களை
எத்தனை மொழிகளில் பாடிய
உன்னதக்கலைஞன் !
மூச்சுக்காற்று முழுவதையும்
பாடல் ஓசையாக மாற்றியவன் !
இமயத்தின் உச்சம் தொட்டும்
பணிவின் வடிவமாக
பண்பின் சிகரமாக
இறுதி உரையிலும்
வெளிப்படுத்தியவன்…
இதுவரை மக்களுக்கு
பாடியது போதும்
இனி என்னிடம் பாட வா
என்று இறைவன்
அழைத்துக் கொண்டான்!
போய் வா தம்பி
இவ்வாறு சிவகுமார் கூறியுள்ளார்.