‘லிங்கா’வுடன் டிசம்பர் 12-ல் வெளியாகும் ‘யாரோ ஒருவன் ‘

_MG_0649நவகிரகா சினி ஆர்ட்ஸ் என்ற படநிறுவனம் தயாரிக்கும் படம் “ யாரோ ஒருவன் “

இந்த படத்தில் ராம் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகியாக ஆதிரா என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் சுரேஷ் நாரங், மானவராவ், அலிஷா, நெடுக்காடு ராஜ், மருதுபாண்டி, ஒரியன், சான்ரா  ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை,திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை அமைத்து இயக்குகிறார் கே.என்.பைஜூ.

படம் பற்றி இயக்குநர் என்ன கூறுகிறார்?

”நான் தேசிய விருது பெற்ற மலையாள இயக்குநர் பத்மராஜிடம் உதவியாளராக பணியாற்றியதுடன் பல தொலைகாட்சித் தொடர்களையும் இயக்கி இருக்கிறேன்.

காணாமல் போன தனது மனைவியை தேடிச் செல்லும் ராம் மற்றும் துப்பறியும் நிபுணர் மற்றும் அவரது குழுக்கள் சந்திக்கும் அமானுஷ்ய சம்பவங்கள் படத்தின் கதை! திகிலும், மர்மங்களும் நிறைந்த காடு மற்றும் வீடு போன்றவற்றால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் திகில் நிறைந்ததாக இருக்கும்.

வருகிற டிசம்பர்  12 லிங்கா ரிலீஸ் அன்று எங்கள் படத்தையும் ரிலீஸ் செய்கிறோம். ‘லிங்கா’ திரையிடப் படாத  திரையங்குகளில் எங்கள் படம் திரையிடப் படும். இப்போதுதான் எங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கும் ஏனென்றால் வேறு எந்த படமும் வெளியாகவில்லை அதானால் நாங்கள் ரிலீஸ் செய்கிறோம்” என்றார் இயக்குநர் கே.என்.பைஜூ.