சீனுராமசாமியின் ‘ இடிமுழக்கம்’படப்பிடிப்பு நிறைவு!

Skyman Films International கலைமகன் முபாரக் தயாரிக்க, GV பிரகாஷ் குமார்-காயத்ரி நடிப்பில், இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகும் “ இடிமுழக்கம்” படத்தின் படபிடிப்பு நிறைவடைந்தது.

தமிழ் திரையுலகில் பல தரமான படைப்புகளை தயாரித்து வரும் Skyman Films International கலைமகன் முபாரக், தயாரிப்பில், தற்போது ‘வேலன்’ படம் வெளியீட்டு தயாராக உள்ளது. இந்நிலையில் அவரது தயாரிப்பில் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த வெற்றியை மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்.
விமர்சன ரீதியில் பாராட்டுகளைப் பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், GV பிரகாஷ் மற்றும் காயத்ரி நடிப்பில் உருவான “இடிமுழக்கம்” திரைப்படத்தின் படபிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, படக்குழு வறட்சியால் பாதிக்கபட்ட தென் மாவட்ட நிலங்களை வளமாக மாற்ற உதவிய ஜான் பென்னிகுயிக்கிற்கு படக்குழு மரியாதை செலுத்தினர்.

Skyman Films International கலைமகன் முபாரக் கூறியதாவது…
“ எங்கள் அனைவருக்கும் இது ஒரு சிறப்பான தருணம், அதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று “இடிமுழக்கம்” படத்தின் படப்பிடிப்பு முடிமுடிவடைந்தது. மற்றொன்று திரு பென்னிகுயிக்கிற்கு மரியாதை செலுத்தியது. தென் மாவட்டங்களுக்கு அவர் ஆற்றிய தொண்டு காலத்தால் அழியாதது. படப்பிடிப்பை குறிப்பிட்ட நேரத்தில் முடித்ததற்கு, நம் இயக்குநர் சீனு ராமசாமிக்கு நான் நன்றி சொல்லிகொள்கிறேன்.
இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் படபிடிப்பை திட்டமிட்டபடி முடிப்பது, சாதாரண காரியம் அல்ல. மொத்த படக்குழுவும், படத்தினை சரியான நேரத்தில் முடிப்பதற்கு உறுதுணையாக இருந்தனர். GV பிரகாஷ் குமார், காயத்ரி மற்றும் இந்த படத்தில் பங்காற்றிய எல்லா நடிகர்களுக்கும், நான் நன்றி சொல்லிகொள்கிறேன். படத்தின் முதல் பார்வை, டிரெய்லர், ஆடியோ மற்றும் வெளியீட்டு தேதியை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளோம்.

GV பிரகாஷ் குமார் மற்றும் காயத்திரி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், சரண்யா பொன்வண்ணன், MS பாஸ்கர், அருள்தாஸ் மற்றும் திறமையான மேலும் பல நடிகர்கள் நடிக்கின்றனர்.