இரட்டையர் வில்லன்கள் CSK- சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா

twins-villain.j3SS ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில்,  வைப்ரன்ட் மூவீஸ் வெளியீட்டில் மார்ச் 27 ஆம் தேதி வெளிவருகிறது ‘CSK – சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா’ திரைப்படம் . புதுமுக இயக்குநர் சத்திய மூர்த்தி இயக்கும் இப்படத்தில் ‘இனிது இனிது’ ஷரண், நாராயண், விமல் மற்றும் ஜெய் குஹைனி நடித்துள்ளனர். ‘வேட்டையாடு விளையாடு’ ‘அமுதன் இளமாறன்’ போல் கிரைம் த்ரில்லர் படமான CSKவில் நாராயண், விமல் வில்லன் இரட்டையார்களாக நடித்து கலக்கியுள்ளனர். ‘இனிது இனிது’ திரைப்படத்திற்கு பிறகு இணையும் இருவரும் தங்களது அனுபவங்களை கூறினர்.

‘CSK – சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா’ படத்தில் நடித்தது மிக உற்சாகமான அனுபவம். நான் சஞ்சய் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். ஒரு சந்தர்ப்பத்தால் ஏற்படும் பரபரப்பில்  விமலுடன் இணைந்து தவறான பாதையில் இறங்குகிறேன். இருவரும் இணைந்து வரும் காட்சிகள் விறுவிறுப்புடன் நகர்ந்து செல்லும். ‘டிக் டிக் டிக்‘, ‘நூறாவது நாள்’ படங்களை போல் முழு நீள த்ரில்லர் படம். மீண்டும் ‘இனிது இனிது’ நண்பர்களுடன் இணைந்து நடித்ததில் மிக இனிதாய் இருந்தது.” என உற்சாகம் பொங்கக் கூறினார் நாராயண்.

விமல் ஆதித்யா இப்படத்தில் வரும் தனது கதாப்பாத்திரத்தைப் பற்றிக் கூறும்பொழுது  “ சந்துரு என்ற எனது கதாப்பாத்திரம் ஒரு வஞ்சகம் நிறைந்த இளைஞன். இக்கட்டான சூழ்நிலையில் நானும் நாராயண் இருவரும் மூளையும் உடம்புமாக இணைந்து செயல்பட்டுள்ளோம். நான் மூளையாக இருந்து தீட்டும் திட்டங்களை நாராயண் செயல்படுத்துவார். இயக்குநர் சத்தியா எனக்கு முழு சுதந்திரம் அளித்தார். படம் பார்த்த நண்பர்கள் இரண்டு மணி நேரம் எப்படி படம் மின்னல் வேகத்தில் செல்கிறது என்று கூறினார்கள். இரண்டாவது படத்திலேயே எனது நடிப்பை வெளிபடுத்தும் விதமாக வில்லத்தனமான கதாப்பாத்திரம் கிடைத்திருப்பது எனது நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாய் எண்ணுகிறேன்.” எனக் கூறினார் விமல் ஆதித்யா.