சென்னை ஸ்மாஷர்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றிபெற்று அரை இறுதிக்குத் தகுதி!

chennai-smashersசென்னை ஸ்மாஷெர்ஸ் அணி இதுவரை நடந்த நான்கு போட்டிகளில் வெற்றிபெற்று அரை இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

இன்று மாலை 6.30 மணியளவில் பெங்களூரில் நடக்கும் போட்டியில் டெல்லி அணியுடன் மோத உள்ளது. இப்போட்டியில் சென்னை ஸ்மாஷெர்ஸ் அணி வெற்றி பெற்றால் 17ம் தேதி டெல்லியில் நடக்கும் இறுதிபோட்டிக்கு தேர்வு பெறும். அடுத்ததாக ஹைதராபாத்தில் நாளை நடக்கும் மற்றொரு போட்டியில் மும்பை ராக்கெட்ஸ் மற்றும் அவதே வாரியர்ஸ் மோத உள்ளன. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிபோட்டிக்கு தகுதி பெறும். இந்த தொடரில் கண்டிப்பாக தங்கள் அணி வெற்றிபெற்று கோப்பையை வெல்லும் என்றும் மேலும் போட்டியில் கிடைக்கும் பரிசு தொகையில் பாதியை முன்னதாகவே கூறியது போல தமிழக மக்கள் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று உறுதி கூறுகிறார்,சென்னை ஸ்மாஷெர்ஸ் அணி உரிமையாளர்  விஜய பிரபாகரன்.