பசங்க2 திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

pasanga2etபசங்க2 திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் நாயகன் சூர்யா பேசியபோது , ”எனக்கு இந்த சமயத்தில் மழை வெள்ளத்தால் பாத்திக்கப்பட்டதை பற்றி பேசுவதா அல்லது , பசங்க2 படத்தை பற்றி விரிவாக பேசுவதா என்று தெரியவில்லை.சமீபத்தில் கன மழையும் வெள்ளமும் நம்முடைய சென்னைக்கு புதிய ஒரு முகத்தை தந்துள்ளது என்றே சொல்லலாம். இந்த வெள்ளத்தின் மூலம் நம் கண்ணுக்கு பல்வேறு தன்னார்வலர்கள் தெரிந்தனர்.

நான் பசங்க2 படத்தின் கதையை வேறு ஒரு படபிடிப்பு தளத்தில் இருக்கும் போது தான் கேட்டேன். கதையை கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. பல ஆண்டுகளாக இயக்குநர் பாண்டிராஜ் இந்த கதையோடு வாழ்ந்துள்ளார் என்று தான் கூற வேண்டும். அவர் இந்த கதையை உருவாக்க 3 முதல் நான்கு ஆண்டுகள் எடுத்துக்கொண்டுள்ளார். நாம் நம்முடைய குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்பதை இப்படம் வலியுறுத்தும். இந்த படம் உங்கள் அனைவரையும் கவனிக்க வைக்கும். படத்தில் உள்ள அனைவரையும் ஒன்று சேர்த்தது படத்தின் கதைதான் . நான் இயக்குநரிடம் படத்துக்காக அவர் கொடுத்த கதையை அப்படியே எடுக்க வேண்டும் என்று கூறினேன். ஏன் என்றால் கதையில் அவ்வளவு நல்ல விஷயங்கள் இருந்ததது. ஆனால் இப்போது படம்ஒன்றரை மணி நேர படமாக வந்துள்ளது. நிச்சயம் படம் அனைவரையும் கவரும். படத்தில் நடித்த அனைவருக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். படத்தில் நாயகியாக நடித்துள்ள பிந்து மாதவி படபிடிப்பு தளத்தில் ஒரு நாள் கோலம் போட்டு கொண்டு இருந்தார் , தீடீர் என்று பார்த்தால் கிளாப் அடித்து கொண்டு இருப்பார் , இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் படத்தில் அனைவரும் ஒரு குடும்பம் போல் இருந்து வேலை செய்தார்கள்” என்றார்