தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி பிலிம் புரொடக்ஷன்ஸ் கூட்டு முயற்சியில்,
அதிரடி திரில்லர் படம் ஒன்றை தயாரிக்கிறார்கள். மாஸ்டர்பீஸ் நிறுவனம் வழங்கும் இப்படத்திற்கு #சொடக்கு என்று பெயர் வைத்துள்ளார்கள்.நட்டி, விதார்த், ஆனந்தி, ரக்ஷிதா மற்றும் பலர் நடிக்க இப்படத்தை காமராஜ் மனோன்மணி இயக்கியுள்ளார்.
மலேசியாவில் பத்துகேவ்ஸ் ஷென்கா கன்வென்சன் செண்டரில் வருகிற ஞாற்றுக்கிழமை 26ம் தேதி மாலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறுகிறது. விழாவில், ஆடியோவை டைரக்டர்,நடிகர் லோகேஷ் கனகராஜ் வெளியிட,
டிரைலரை டைரக்டர்,நடிகர் வெங்கட் பிரபு வெளியிடுகிறார். இயக்குநர் லிங்குசாமி, இப் படத்திற்கு வசனம் எழுதியுள்ள இயக்குநர் சரண், படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். மேலும் சிறப்பு விருந்தினர்களாக பல டத்தோக்கள் கலந்து கொள்கிறார்கள்.
அது என்ன ‘சொடக்கு’? ‘சொடக்கு’ போடற நேரத்துல எல்லாம் மாறிப்போச்சு.. வாழ்க்கையே தலை கீழாக ஆயிடுச்சுன்னு சொல்லுவாங்க.
அப்படி ஒரு சொடக்கு போடுற நேரத்துல என்னென்ன நடந்தது என்பது தான் இக்கதை. நம்ம ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையிலும் இது நடந்திருக்கும். இக்கதை நமக்கு ரொம்ப நெருக்கமாக இருக்கும்.
தமிழ் திரைப்படமான இதன் படபிடிப்பு முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்பட்டது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும்.
‘அமர்க்களம்’, ‘ஜெமினி’, ‘வசூல்ராஜா MBBS’போன்ற பல ஹிட் படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் சரண், இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார்.கதை, திரைக்கதை அமைத்து இயக்கி வருகிறார் இயக்குநர் காமராஜ் மனோன்மணி.
நாளை நடப்பது இன்றைக்கே நமக்கு தெரிந்தால் எப்படி இருக்கும்! சுவாரசியமான இந்த நிகழ்வால் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள்.. குழப்பங்கள் என்பது இயல்பு வாழ்க்கையை எப்படி எல்லாம் புரட்டி போடுகிறது.. எப்படி எதிர்கொள்வது என்பதை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இப்படம் ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய திரைக்கதை அமைப்பாக ஒரு திரில்லர் அனுபவத்தை கொடுக்கும்.
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து, கதை நாயகர்களாக ரசிகர்களை தனித்தனியாக குஷி படுத்தி வரும் நாயகர்கள் நட்டி, விதார்த்.இவர்கள் இணைந்து #சொடக்கு படத்தில் நடிப்பதால்,ரசிகர்கள் எதிப்பார்ப்பை கூட்டியுள்ளது.
இவர்களுடன்,கயல் ஆனந்தி, ரக்ஷிதா (சரவணன் மீனாட்சி புகழ்), மலேசியா ரஜினிகாந்த் dato கணேசன், அபிஷேக் சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
படபிடிப்பு முழுவதும் முடிந்து பிற வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.


