மலேசியா வந்தடைந்த கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு சிறப்பான வரவேற்பு!

மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து கவிப்பேரரசு #வைரமுத்து சமீபத்தில் எழுதி சாதனை படைத்த ‘மகாகவிதை’ நூலுக்கு ‘பெருந்தமிழ் விருது’ வழங்குகிறது.

இவ்விழா நாளை மலேசியாவில் தான்ஶ்ரீ டாக்டர் எஸ் .ஏ. விக்னேஸ்வரன் தலைமையில் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் முன்னிலையில் வழங்கப்படுகிறது.

இந்த விருதினைப் பெற்றுக் கொள்ள இன்று மாலை மலேசியா வந்தடைந்தார் கவிப்பேரரசு வைரமுத்து.

மலேசியா வந்தடைந்த கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு  ‘டத்தோ’ ஶ்ரீ எம் சரவணன் அவர்கள் தலைமையில் விமான நிலையம் முதல் தங்கி இருக்கும் ஹோட்டல் வரை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது