நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் நெருக்கம் கண்டு பொறாமைப் பட்டேன் : மன்சூர்அலிகான் கலகலப்பு

IMG_3481விஜய்சேதுபதி. நயன்தாரா, ராதிகா, பார்திபன் நடிப்பில்.நடிகர் தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பில் லைக்கா புரொடக்ஷன்ஸ் வெளியிடும் படம் ‘நானும் ரௌடிதான்’ .

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது.

நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அனிருத் பேசும்போது ” விக்கியை (விக்னேஷ் சிவன்)  பாடலாசிரியராக எனக்குப் பழக்கம். ‘வணக்கம் சென்னை’ யில் எழுதினார். இயக்குநராக அவருக்கு  ‘நானும் ரௌடிதான்’ படம் புதிதாக இருக்கும்.இதிலும் பாடல் எழுதியிருக்கிறார்.

விஜய்சேதுபதிக்கும் புதிய வகையில் இப்படம் அமையும்.

இப்படத்தில் பணிபுரிந்தது நட்பான, உணர்வு பூர்வமான பயணமாக இருந்தது.

பாடல்கள் வெற்றிபெற ஊடகங்கள் உதவின .பாடல்கள் பற்றி ஷங்கர் சார் ட்வீட் போட்டு பெரிதாக்கி விட்டடார்.” என்றார்.

நடிகர் மன்சூர் அலிகான் பேசும் போது ” படப்பிடிப்பில் இயக்குநர் எதிர்பார்த்தது வரும்வரை விடமாட்டார். அவர் நல்ல திறமைசாலி. வெளிப்புறப் படப்பிடிப்பில் கதாநாயகி நயன்தாரா கூட கொளுத்தும் வெயிலிலும் நீண்ட நேரம் பேசிக் கொண்டே இருப்பார்.கொடுத்து வைத்தவர் என்று நினைப்பேன். அப்படி என்னதான் பேசுவார்களோ?. சிட்டுக் குருவிகள் போலநீண்ட நேரம் பேசிக் கொண்டே இருப்பார்கள். எனக்குப் பொறாமையாக இருக்கும்.

விஜய் சேதுபதி பந்தா இல்லாதவர். அநியாயத்துக்கு இப்ப டிஎல்லாம் பந்தா இல்லாமல் இருக்கக் கூடாது.

இயக்குநர் படப்பிடிப்பில் என்னிடம் நன்றாக வேலைவாங்கினார். நான் நடித்து முடித்ததும் படக்குழுவில் கைதட்டல் எல்லாம் வாங்கினேன். அந்தக் கைதட்டல் விருதைவிட பெரிய விஷயம். ராதாரவி என்னை சங்கத்தை விட்டு தூக்கியதை விட அந்தக் கைதட்டல் பெரிய விஷயம் என்பேன்.” என்றார்.

நிகழ்ச்சியில் இயக்குநர்கள்  பார்த்திபன்,  விக்னேஷ் சிவன்,அழகம் பெருமாள், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், கலைஇயக்குநர் கிரண், நடிகர்கள் விஜய் சேதுபதி , ஆர் ஜே. பாலாஜி
ஆகியோரும் பேசினார்கள்.