விஜயகாந்த் மகன் நடுக்கடலில் படகில் போட்ட சண்டைக் காட்சி!

shanmugapandi6சில தினங்களுக்கு முன் ‘சகாப்தம்’ படத்திற்காக மலேசியாவில் உள்ள பினாங் என்ற இடத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக போட் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டது.

இதில் கதாநாயகன் சண்முகப்பாண்டியன் ஐம்பது வில்லன்களுடன் 15  படகுகளில் இருநூறு துணை நடிகர்களோடு சேர்ந்து நடுக்கடலில் சண்டைக் காட்சியில் பங்கேற்றார். அந்த சண்டைக் காட்சி ஐந்து கேமிராக்கள் வைத்து மிக பிரமாண்டமாக படமாகப்பட்டது. மேலும் பிரமாண்டம் சேர்ப்பதற்காக ஹெலிகாப்டர் மூலமாகவும் இந்த சண்டைக் காட்சியை படமாக்கியுள்ளார்கள்.

இந்த சண்டைக்காட்சி மொத்தம் நான்கு நாட்கள் நடைபெற்றது தாய்லாந்தை சேர்ந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கேச்சா அவர்கள் சண்டை அமைக்க அந்தச் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.

இப்படத்தின் மூலம் சவ்ரவ் என்ற இந்தி வில்லன் நடிகர் தமிழில் அறிமுகமாகிறார்.

நாயகிகளாக நேகாவும், சுப்ரா ஐயப்பாவும் அறிமுகமாகிறார்கள். இவர்களோடு சிங்கம்புலி, ஜெகன், பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசன், தேவயாணி, ரஞ்சித், ராஜேந்திரநாத், சண்முகராஜன்,’ பன்னீர் புஷ்பங்கள்’ சுரேஷ், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரிக்கிறார்.இயக்கம்  : சுரேந்திரன்,கதை  : நவீன் கிருஷ்ணா.வசனம்   : வேலுமணி.இசை  : கார்த்திக்ராஜா,ஒளிப்பதிவு   : பூபதி,படத்தொகுப்பு       : எஸ்.பி.அஹமது    ,கலை :  ஜே.கே,சண்டைப்பயிற்சி    : ராக்கி ராஜேஷ் மற்றும் கேச்சா ​நடனம்                 : ஷோபி,அபி,நோபல்.