சத்யபாமா பல்கலைக்கழகத்தில் அபிஷேக் பச்சன் !

IMG_6915அகில இந்திய பல்கலைக்கழக ஆண்கள் கூடைப்பந்து போட்டி சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழக உள்விளையாட்டு அரங்கில் ரெமிபாய் ஜேப்பியார், டாக்டர் மரிய ஜான்சன், டாக்டர் மரிய ஜீனா ஜான்சன் முன்னிலையில் முன்னாள் சர்வதேச தடகள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் போட்டியை ஜனவரி 12ந்தேதி தொடங்கி வைத்தார்.

தென் மண்டல கூடைப்பந்து ‘சாம்பியன்” சத்யபாமா  பல்கலைக்கழகம் உட்பட 16  பல்கலைக்கழக அணிகள் கலந்துகொண்டன.இறுதிப்போட்டியில் சென்னை பல்கலைக்கழக-சத்யபாமா பல்கலைக்கழக அணிகள்  பலப்பரீட்சை நடத்தின. ஆரம்பத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி   15 – 0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் இருந்த சத்யபாமா பல்கலைக்கழக அணி பின்பு சென்னை  பல்கலைக்கழக அணியின் சிறப்பான ஆட்டத்தை தாக்கு பிடிக்க முடியாமல் திணறினார்கள்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னை பல்கலைக்கழக அணி 81-64 என்ற புள்ளி கணக்கில் சத்யபாமா பல்கலைக்கழகத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பரிசளிப்பு விழாவில் இந்தி நடிகர் அபிஷேக் பச்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார். சத்யபாமா பல்கலைக்கழக இயக்குநர்கள் மரிய ஜான்சன், மரிய ஜீனா ஜான்சன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.