ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவை இயக்குநர்கள் ஆக்கும் கமல்ஹாசன்!

உலக நாயகன் கமல்ஹாசனும் ஆர். மகேந்திரனும் இணைந்து தயாரிக்கும் திரைப்படத்தினை சண்டை இயக்குநர்கள் அன்பறிவ் சகோதரர்கள்  இணைந்து இயக்குகிறார்கள்.

இது தொடர்பாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது 55 வது தயாரிப்பாக KH 237  திரைப்படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது .உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இந்தத் திரைப்படத்தின் மூலம் ஸ்டண்ட் மாஸ்டர்கள் சகோதரர்கள் அன்பறிவ் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள்.

ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக இந்தப் படத்தை கமல்ஹாசனும் ஆர். மகேந்திரனும் தயாரிக்கிறார்கள் .இந்தியத் திரை உலகின் ஸ்டண்ட் பிரிவில் அன்பறிவ் முக்கிய இடம் வகிக்கிறார்கள். ஸ்டண்ட் இயக்குநர் என்ற இடத்திலிருந்து அவர்கள் திரைப்பட இயக்குநர்களாக முன்னேறுவது அவர்களது அர்ப்பணிப்புக்கும் திறமைக்குமான நற்சான்று.

KH 237 திரைப்படத்தின் வழியாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சிறந்த திரைப்படப் பங்களிப்பு இன்னும் மேம்படும். அன்புமணி அறிவுமணியும் இந்தப் படத்தை இயக்குவதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. திரைப்பட உருவாக்கத்தில் இதன் மூலம் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது. ஸ்டண்ட் காட்சிகளை நேர்த்தியாக உருவாக்குவதற்காகக் கடுமையாக உழைக்கும் அன்பறிவ் இணையின் அர்ப்பணிப்பு இந்தத் திரைப்படத்திலும் நிச்சயம் பேசப்படும் .

சிறந்த நடிகரும் தயாரிப்பாளரும் இயக்குநருமான கமல்ஹாசன் இது பற்றிப் பேசும் போது,

” திறமைசாலிகளாக அறியப்படும் இருவர் இயக்குநராக KH237படத்தில் அவதாரம் எடுப்பதில் பெருமைப்படுகிறேன்.ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்
சார்பாக அவர்களை வரவேற்கிறேன்” என்றார்.

ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பறிவ் இது குறித்துப் பேசும்போது,

” அற்புதங்கள் நிகழ்கின்றன. உலகநாயகன் கமல் ஹாசன் அவர்களை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பு அமைந்தது கனவைப் போல் இருக்கிறது” என்றார்கள்.

அதிரடி காட்சிகள் நிறைந்த திரைப்படமாக KH 237, ரசிகர்களுக்கும் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் ஒரு அற்புதமான காட்சி அனுபவமாக இருக்கும் என்பது உறுதி. உலக நாயகன் கமலஹாசன் ரசிகர்களுக்கு இது ஒரு விருந்தாக அமையும்.

புதிய இயக்குநர்களின் திறமையைக் கண்டறிந்து திரைப்படங்களைத் தயாரிப்பதன் மூலம் உலகநாயகன், அன்பறிவ் அவர்களை மிகச் சிறந்த இயக்குநர்களாக உருவாக்குகிறார்.

மிகுந்த உற்சாகத்துடனும் மிகப்பெரிய எதிர்பார்ப்புடனும் இரட்டையர்கள் இணைந்து இயக்குநர்களாகத் தங்கள் திறமையை வெளிப்படுத்தக் காத்திருக்கிறார்கள்.

மிகச் சிறந்த படங்களை உருவாக்கும் எங்கள் இலக்குக்கான நற்சான்றாக இந்தப் படம் அமையும் . KA237 தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் மற்றும் கன்னடத்தில் 2025 ஆம் ஆண்டில் வெளியாகும்’ இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில்  கூறப்பட்டுள்ளது.